எத்துனையோ!
அலுவலகக்கதவுகள்
திறந்த வண்ணமே
உள்ளது-உன் வருகையை
நோக்கிடா.....!!!
நீ வரும் போது பனித்துளியான
உன் கோப மலர்களை-
என் கொண்டையில்
சிரித்து மலர்கிறது அனுதினமும் எனக்குள்....!!!
காங்கேயம் மாட்டு
கொம்பாய்- உன்
அதட்டல் சத்தம் கேட்டு
பயந்து
நடுங்கி இருக்கேண்டா...!!!
நான் முதலில் வந்து விடுவேன்.
நீ-அன்னத்துக்குப்பின்
வருவதுபோல
நீ வருவாய்....!!!
அலுவலகத்தில்
வேலையைவிட்டு
உன்னைபார்ப்பதுஎன் கரு விழி வட்டு
உன் முகங்களாய்
அழகுபடுத்தும் பொட்டு..
நீ அணியும் ஆடையாக
எண்ணி அணிவேன்
நீ அணிந்து வரமாட்டாய்
நான் நினைக்காத நாளில் அணிந்து வந்து
மகிழ்சியை கொடுப்பாய்.....!!!
மேனேஜர் என் நடத்தை
புகழ்ந்த நாட்களெல்லாம்
உன் நடத்தையை பழக
காரணமென அறிந்துகொண்டேன்....!!!
கையில் கட்டிய கருப்பு
கயிறு கூடஎன்
கூந்தல் முடியை பின்னி
அணிந்தது போல உள்ளதடா...!!!
காதோடு தொங்கும்
தொங்கட்டான் தோடும் அதுவும்
உன்னைப்பத்திதாண்டா பேசுது...!!!
மாலை வீட்டுக்கு
செல்லும் முன் கடிகார
முட்களை நோக்கிகொண்டே!
இருப்பதை விட
உனது கண்களையே!
அதிமாய் பார்ப்பதுண்டு...
பார்த்த்துண்டு....!!!
என் அலுவலகத்தில் வட்டமிடும்
காற்றாடி ரெக்கை
என் உச்சந்தலையில்
நீ தட்டுவது போலவே இருக்குடா!!
நீ காணாத பொழுது
என் கண்கள்
அறை அறையாய்
இதய வடிவில் நானே கண்டதுண்டு.....
என் மின்னல் பேச்சுக்கு
சொடக்கு போட்டு
கும்தலக்கடி
கும்மா
சும்மாவ சொன்னாங்க உங்க அம்மா
உன் கனரக காரியச்சிரிப்பில்....
வருகை பதிவேட்டில்
கையோப்பத்தை வைத்து
மேல் எழுதி பார்த்து
கிழிந்த்தது தெரியுமா?
என் மேல் விழி சொருகி
சிந்திக்கும் போது
இமை மடக்கி கவிதைய்யாய்
கழுத்தில் வார்த்தை தவம் கிடக்கும்
நெஞ்சை கடக்கும்
மனசு படபடக்கும்.....
மனசில முன்னாடி
முன்னாடி வந்து போகும்
கில்லாடி காதலண்டா....! நீ...
அலுவலக விடுமுறை என்றால்
முதலில் கோப்படுவது நானாகத்தான் இருக்கும்
உன்னை பார்க்க முடியாம போகுமே! என்று....
அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றாய்
என்றுடா என் இதயத்துக்குள்
அங்கும் இங்கும் நடப்ப
நீ சொன்ன ஒரு வார்த்தை
எனக்குள்
ஆயிரமாயிரம் தாமரை பூத்து கிடக்குது
இப்படிக்கு உன்னுடன்
பணிபுரியும் நேசகி...
Tuesday, August 11, 2009
அலுவலக காதலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment