பேச்சிப்பாறை பவளப்பாறை
வழியாக போகும் போது
உன் எச்சில் நீரை
கமலத்து உயிரை
பார்க்கும்போது
என் கண்கள் பாசுரம் பாடியது....!!!
என்னருகில் வந்து
புத்தகத்தை கொடுத்தாய்
பொன்னமுதில் சிந்தும்
உனது புத்தகத்தை திறந்தேன்
மயக்கத்தை எடுத்தேன்....
என் புகைப்படம் போலவே!
தாஜ்மஹால் முன் நிற்கின்ற
மாதிரி ஒரு புகைப்படம் கண்டு…
ஒருநாள் என் தாவணி நுனியை
எவனோ ஒருவன் மிதித்தான் என்று
உதித்தாய் பாரு
மிதிக்காதே சேரு,.... என்று!
என்னுடன் வந்த தோழி
உன்ன பத்திதான் பேசுறா
அதிகமுறை....
என்னிடம் சில வாரங்களாக
பேசுவதில்லை
நீ உன் காதலை
என்னிடம் சொல்லியதாய்
சொன்ன பிறகு.....
திருவின் உருவத்தை காதலித்தால்
புருவின் குருவை காதலித்தள் என்று
கர்வப்பட்டாள்
காணாங்கொறத்தி மக
கருந்தோடு அணிந்த கருவாட்டுக்கூடைகாரி....
தராசில் தொங்கும்
இருபக்க தட்டாய் தாண்டா
அல்லல் படுது –நீ என் பக்கத்து
இருக்கை அமராவிட்டால்....!!!
ஒருசாய்ச்சு பார்க்கும்
ஒரு பார்வையிலே!
ஓடிக்கொண்டிருக்கும் தென்னை மரங்களெல்லாம்
புன்னை மரமாய் பூத்து குலுங்குவதை பாரேன்....
நுன் நாடி நுரைபொங்க
முன்னே ஒரு தாய் கிழவி கூச்சலிட்டு
குடும்பத்துல குட்டிகலவரம்
பண்ணிவிட்டாள்..போல
ஓட்டுனர் அடித்தான் பாரு
பிரேக்
எனக்கு உன் மேல விழுந்தது
இன்று கிடைச்ச பீர்கேக்....
உனக்கு ஒரு டிக்கெட் வாங்க
என் ஜாக்கெட்டை தடவிய போது
உன் பாக்கெட்டில் ஒலித்தது
திக்கெட்டும் என் பெயரையடா!
நான் பிரிந்து விடுவோமோ!
என படியில இருங்கும் போது
அதிக முறை
நினைப்பதுண்டு....!!!
பலமுறை அம்மாவிடம்
திட்டுவாங்கியதுண்டு
டிக்கெட் எடுக்காதடா
டிக்கெட் எடுக்காதடா என
உன்னை கனவுகளில் அழைத்த போது...!!!
என் வீட்டு படிக்கட்டுகளெல்லாம்
உன் மடுக்கட்டுக்களாய் எண்ணி
தலைவைத்து தூங்கிய காலங்களில்
அப்பாவின் ஏச்சுக்கு ஆளானதுண்டு...
முதன்முதல் ஆளானது
பேருந்தில் உன் பக்கத்திலிருந்துதான்
உன் க்க்கத்தில் என் ஞாபகப்பூவைத்தான்
பூப்பெய்திவிட்டேன்....
பேருந்தில் வரும்
வாசகங்களை குறை
கூறுவதுண்டு
உதடுகள் என்பதற்கு பதிலாக
நம் பெயரை கூறி இருக்கலாமேன.....!!!
பேருந்திலே!
என் வாசக்கூந்தலில்
நீ கூறும் வாழ்த்துச்செய்திக்காகதாண்டா
தினமும்
பூக்காரனிடம் சண்டையிடுவது நான்...
என் தோழி என்னை
ஓடும் பேருந்தில் ஏறாதே!
என்பதற்கு பதில்
ஓடும் உள்ளத்தில் ஊறாதே!
என்று கூச்சலிடுவார்கள்....!!!டா
உனது உள்ளத்தில்
நீந்த கற்றுத்தருவாயா என்னடா!
தருவாய் என்ற நம்பிக்கையில்
படியிறங்கும் உன் காதலி.....!!!
No comments:
Post a Comment